எண்ணங்கள் எழுத்தாக






         

September 12, 2009

ஆரோகியமாக கொறிக்க !!!!!!!!!!

Filed under: Uncategorized — kutty @ 1:51 pm
0
Digg me

நீங்கள் அதிகமாக நொறுக்கு தீனி தின்பவரா????? கட்டு படுத்த முடியவில்லையா?????? கவலை வெண்டாம், ஆரோகியமாக கருக்கு முருக்குவென கொறிக்க நீங்கள் செய்யவேண்டியது அனைத்திலும் ஒரு பிடி தான் :)

வேர்கடலை, பொட்டுகடலை,வறுத்த பட்டாணி, வறுத்து கொண்ட கடலை,அவல், காய்ந்த திராட்சை, பருப்புகள் – பாதாம், பிஸ்தா, முந்திரி (எல்லா பருப்புகளில் 5 அல்லது 6 எடுத்து சிறிது சிறிதாக உடைத்து கொள்ளுங்கள்) . இவை அனைத்திலும் ஒரு கை பிடி அளவு மற்றும் சிறிதாக உடைத்த பருப்புகளை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். எப்பொழுது எல்லாம் கருக்கு முறுக்கு என தின்ன தோன்றுகிறதோ இதை நீங்கள் கொறிக்கலாம். இத்துடன் வேண்டும் ஆனால் பொறி மற்றும் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளது. இதே போல் பச்சை காய்கறிகளிலும் கலவை செய்து தினமும் சாப்பிடலாம் :)

இக்கலவையை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்கு மற்றும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள் .அதற்க்கு மேல் கலந்து வைத்தால் கெட்டு போக வாய்ப்பு உள்ளது ஏன் என்றால் வேர்கடலைகளில் சிக்கு வாடை அடிக்க ஆரம்பித்து விடும்.பிறகு கலவையிலும் வாடை வந்து சாப்பிட முடியாமல் போகலாம்.

பி.கு : பருப்புகள் ஒரு நாளில் 2 மட்டுமே சாப்பிட வேண்டும் ஏன் என்றால் அவைகளில் கொழுப்பு சத்து நிறைந்து உள்ளன.

March 14, 2009

தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது ??????

Filed under: Uncategorized — kutty @ 8:04 pm
0
Digg me

என்ன செய்து கொண்டுஇருகிறது தமிழக அரசு????????? இன்னும் எங்கள் கல்லூரி திறக்கவில்லை …………………………கடந்த மாதம் 1ம்( feb 1st) தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளை இலங்கை பிரச்சனையால் கால வரை இன்றி மூட அரசு உத்தரவு விதித்தது. பிறகு 10ம் தேதி அனைத்து பொறியில் மற்றும் மருத்துவ கல்லூரிகளை திறந்து விட்டார்கள்.இரண்டு நாட்கள்ளுக்கு பிறகு வேறு பல கல்லூரிகளும் திறக்க பட்டன.

எல்லா கல்லூரிகளும் இயங்கி கொண்டு இருக்கிறது, ஆனால் இன்னும் சட்ட கல்லூரிகள் திறக்கவில்லை !!!!!!!!!!!!!!!!!!!!! கடந்த மாதம் 23ம் தேதி திறந்து விடும் என செய்திகள் வந்தன.அப்பொழுது தான் வக்கீல்களுக்கும் காவலர்கல்லுக்கும் அதிரடியான சண்டை நடந்தது.இந்த பிரச்சனையால் சட்ட கல்லூரிகள் திறக்கவில்லை.இன்னும் திறக்கவில்லை ………………………… :(

இதற்கு இடையில் எங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் இன்னும் ஏன் திறக்கவில்லை என்று வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.அதற்க்கு நீதிமன்றம் இன்னும் சட்ட கல்லூரி ஏன் திறக்கவில்லை என்று, இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க இரண்டு வாரம் அவகாசம் கொடுத்தது.இரண்டு வாரம் கெடு முடிந்தது ஆனாலும் இன்னும் அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை………………………………………

நேற்று தான் சட்ட பல்கலைகழகம் தேர்வு முடிவுகள் வெளியிட்டனர் .இன்று அதிசியமாக “அம்மா” அவர்கள் சட்ட கல்லூரியை திறக்க தமிழ்நாட்டு அரசுக்கு கோரிக்கை அளித்தார் (அதற்க்கு மிக்க நன்றி). வரும் வாரமாவது கல்லூரி திறக்கும்மா என்று காத்து கொண்டு இருக்கிறோம் ??????????????

January 1, 2009

எப்பொழுது தமிழ் புத்தாண்டு ???????

Filed under: Uncategorized — kutty @ 10:36 pm
0
Digg me

வழக்கமாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் கொண்டாட படுகிறது.ஆனால் இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக தை முதல் நாள் கொண்டாட படும் என்று நம் முதலமைச்சர் கூறி இருக்கிறார். அதற்கு எதிர்ப்புகளும் வந்தன. காலம் காலமாக சித்திரை முதல் நாளில் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு இனி தை முதல் நாளில்(Jan 14) கொண்டாடப் படும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சரி ஏன் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கருதப்பட்டது, பிறகு ஏன் தை முதல் நாள் இனி தமிழ் புத்தாண்டாக கருதப்படும் என்று இணையத்தளத்தில் தேடி படித்தேன்………………………ஐயோ முடியல என்னலே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! படித்து குழம்பி விட்டேன் !!!!!

சித்திரை முதல் நாள் ஏன் கொண்டாட படுகிறது —– விள்ளக்கம்
பிறகு தை முதல் நாள் ஏன் கொண்டாட பட இருக்கிறது ——- விள்ளக்கம்

இது எல்லாம் போக நீதிமன்றம் கூட தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் தப்பு இல்லை என்று கூறி விட்டது———– விள்ளக்கம்

கடைசியாக தமிழ் புத்தாண்டு மாற்றியது சரியா ? தவறா ?

November 10, 2008

கல்யாணம்

Filed under: Uncategorized — kutty @ 5:54 pm
0
Digg me

கல்யாணம் – புது வாழ்க்கை தொடங்க போகிறது என்று மகிழ்ச்சியில் :) மிதப்பதா அல்லது பெற்றோர்களை பிரிந்து இருக்க போகிறோம் என்று வருத்த படுவதா :( ?????????

எங்கள் வீட்டில் நான் , என் அக்கா தான்.அக்காவிற்கு இந்த வருடம் டிசம்பர் மாதம் வந்தால் கல்யாணம் ஆகி இரண்டு வருடம் முடியும். எல்லா தந்தைக்கும் இருக்கும் கடமை தான் என் தந்தைக்கும் “பெண்ணை நல்ல இடத்தில் கட்டி கொடுக்கவேண்டும் ………”. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் , பார்த்து கொண்டே இருந்தார். அவர்க்கு அப்போ நினைவு இல்லையோ என்னவோ எங்கள் வீட்டில் ரெடிமேட்(readymade :D ) மாப்பிள்ளை இருப்பது( அவருடைய அக்கா மகன்) :) . என் அக்காவிற்கு அவள் அத்தை மகனை கட்ட தான் ஆசை. எல்லா தந்தை போல் என் தந்தையும் எதிர்த்தார், இவர் மட்டும் விதிவிலக்கா என்ன!!!!!!!!!. முதலில் எதிர்த்தாலும் பிறகு ஒத்து கொண்டார்.

நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தது. கல்யாண தேதியும் குறித்தார்கள். என் அக்கா அத்தை மகனை தானே கட்டிக்க போறான்னு கவலையே இல்லாமல் சந்தோஷமாக இருந்தேன் . கல்யாணத்தன்று மாமா தாலி கட்ட போனார் , அவளோ தான் என் கண்களில் இருந்து மல மலவென கண்ணிர் கொட்டியது :( . ஆனந்த கண்ணிரா அல்லது இனி என் அக்கா முன்பு போல் நம்மோட இருக்க மாட்டாள் என்று நினைத்து கண்ணிர் வந்ததா !!!!!!!!! என்னகு புரியவில்லை………….. இன்னும் புரிய வில்லை ஏன் அழுதேன் என்று.

இந்த வருடம் தீபாவளி அன்று வந்தாள். மதியானம் வந்து கொஞ்சம் நேரம் தான் இருந்தாள் , அப்புறம் மாலை சீகிரமாக சென்று விட்டாள். அவளுடைய தலை தீபாவளிக்கும் போன வருடம் வந்து பொய் விட்டால்,அப்போ என்னகு ஒன்றும் தெரியவில்லை ஏன் என்றால் என்னகு தேர்வு இருந்தது , நானும் அவளை சட்டை பண்ணவில்லை.ஆனால் இந்த வருடம் என்னக்கு தேர்வு இல்லை , அவளும் இல்லை என்னால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை. ஏன் தாங்க முடியலேன்னு சொன்னா அவள் வீட்டை விட்டு செல்லும்போது சிவந்து கண்களோடு சென்றாள் . என்ன தான் சொந்தத்தில் கட்டி குடுத்தாலும் அவளால் இங்கு நிறைய நாள் தங்க முடியவில்லை ஏன் என்றால் விடுமுறை நாட்களும் கம்மி ,அத்தோடு இல்லாமல் அவளுக்கு என்ற குடும்பம் இருக்கிறது.

எவன் தான் கண்டு பிடித்தானோ தெரியவில்லை பெண் அவள் புகுந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று (அவன் மட்டும் என் கையில் சிக்கினா கொன்னே போட்டுவிடுவேன் :D ). அப்பிடி இருந்தால் தான் இந்த சமுதாயத்தில் மரியாதையும்
கூட!!!!!!!!! இதை எல்லாம் பார்க்கும்பொழுது கல்யாணம் தேவை தானா என்று நான் யோசிக்கிறேன் ……………………………… :(

November 7, 2008

என் வீட்டு சுவரில் இருந்து………………

Filed under: Uncategorized — kutty @ 12:32 am
0
Digg me

அப்பா

      அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால், அப்பா வீட்டின் அடையாளம்…
      அம்மா ஊட்டுவது அன்பு ;
      அப்பா காட்டுவது மனத் தெம்பு…

      நாளும் பொழுதும் உணவள்ளிப்பவள் அம்மா . ஆனால்
      அந்த உணவைச் சம்பாதித்து தருவது
      அப்பா என்பதை ஏனோ மறந்தே போகிறோம்!

      கல்லில் இடரும்போது வாயில் வரும் வார்த்தை “அம்மாடியோ”
      காரில் மோதி விழும்போது கூவி அழைக்கிறோம் “ஐயோ அப்பா”
      ஏனெனில் சின்னச் சின்ன துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு
      ஆனால் பெரிய துன்பங்களில் துணைநிற்பது அப்பாவின் ஆதரவு.

      அப்பா ஒரு நெடிய ஆலமரம். அவர் தரும் குளிர்நிழலே குடும்பம்
      அனைத்துக்கும் எபோழுதும் அடைக்கலம்

October 24, 2008

மோனிட்டர்க்கு குளுரு !!!!!!!!!!!!!!

Filed under: Uncategorized — kutty @ 2:22 pm
0
Digg me

எபோழுதும் போல் என் கணினி மற்றும் மொனிட்டரையும் ஆன் செய்தேன். ஆன் செய்தால் மொனிட்டரில் வார்த்தைகள் எல்லாம் மங்கலாக தெரிந்தது. நான் என் கண்களில் தான் ஏதோ கோளாறு என்று நினைத்து , தங்கையை அழைத்து மோனிட்டரை கூர்ந்து கவனிக்க சொன்னேன். அவளும் பார்த்துவிட்டு , என்ன ஒரே மங்கலாக தெரிகிறது என்று சொன்னாள் . ஆனால் மங்கலாக தெரிந்த வார்த்தைகள் ஒரு ஐயிந்து நிமிடம் கழித்து சரியாகி விட்டது . என் தம்பியும் இதே தான் சொன்னான் .பிறகு தான் மொனிட்டர் குளிரின் காரணமாக மங்கலாக தெரிகிறது என்று கண்டுபிடித்தோம்.
மின் இயந்திரங்கள் மிதமான வெப்பத்தில் அதாவுது அறையின் வெட்பநிலையில் இருக்க வேண்டும், இல்லையெனில் இயங்குவதில் சிரமப்படும்.

October 17, 2008

மெகா இல்லை இல்லை,மெகா மெகா தொடர் !!!!!!!!!!!!!

Filed under: Uncategorized — kutty @ 4:42 am
Tags:
0
Digg me

பேரு தான் மெகா, ஆனா மெகா மெகா தொடர் ஆக இருக்கும் பொல.ஆமாங்க நான் நம்ம சன் டிவி லே ஓடுதே ஆனந்தம் மற்றும் கோலங்களை தான் சொல்லுகிறேன். என்னனு சொல்லறது எனக்கு தெரிந்த வரை கிட்ட தட்ட நான்கு-ஐந்து வருடமாக ஓடி கொண்டு இருக்கிறது.கதை வல வலன்னு ஜவு மாறி இழுத்து கொண்டே இருக்கிறார்கள்.

மெகா தொடர்னா ராடான் தொடர்தாங்க,சும்மா சூப்பரா இருக்கும்.என்னக்கு மிகவும் பிடித்த தொடர் இப்போ ஓடி கொண்டு இருக்கும் அரசிதான்.சித்தி,அண்ணாமலை,செல்விக்கு அப்புறம் இப்பொழுதுஅதிரடியாக ஓடிக்கொண்டு இருக்கிறது அரசி.இவங்க தொடர்லே என்ன ஸ்பெஷல்னா,எல்லாம் ஷார்ட் அண்டு ஸ்வீட்டா மற்றும் திகிலாகவும் இருக்கும்,அதாவுது ஒன்றரை அல்லது இரண்டு வருஷம் தான் ஒரு தொடரை எடுப்பாங்க .சித்தி சூப்பர் டூபப்ர் ஹிட்.அண்ணாமலை கொஞ்சம் மந்தமாக ஓடுச்சு ஆனா செல்விலே பிக் ஆப் ஆயிட்டாங்க .கொஞ்சம் நல்லா ஓடிக்கொண்டு இருந்த செல்வியை கூட சீக்கிரம் முடிக்க பாத்தாங்க.என்னடா சீக்கிரம்மா முடிக்கறாங்கன்னு பாத்தா செல்வி அரசிலே தொடரும்ன்னு ஒரு நல்ல செய்தியை சொன்னாங்க .நான் ராடான் தொடரோட தீவிரமான ரசிகை.

ராதிகா மேடம் ஒரு நிகழ்ச்சியில் கூறியதுவெள்ளித்திரையில் படம் என்றால் விஜயா,சூர்யா வா,பிரசாந்த,இல்லை யாரு ஹீரோன்னு கேப்பாங்க,ஆனா சின்ன திரையில்லே புது சீரியல்ன்னுகேள்வி பட்டாள் எந்த கதாநாயகி நடிக்க போறாங்கன்னு கேப்பாங்க.But when it comes to serials ‘We are the real heroes’.” சூப்பரா சொன்னாங்கலே .

கடைசிலே நான் கூறுவது என்னவென்றால் ஆனந்தம் மற்றும் கோலங்களை சீக்கிரமா முடிங்கப்ளீஸ்.

என்னை சிந்திக்கவும் சிரிக்கவும்வைத்த ஹைக்கூ

Filed under: Uncategorized — kutty @ 3:25 am
Tags:
0
Digg me

“சுத்தம் சோறு போடும்

படித்து விட்டு சிரித்தான் சாக்கடை தொழிலாளி !!!!!!

September 19, 2008

Hello world!

Filed under: Uncategorized — kutty @ 4:35 pm
0
Digg me

உலகம்.net – தமிழ்ப்பதிவுகள் உங்களை வறவேற்கிறது. இது உங்களது முதல் பதிவு. தமிழ் பதிவுகளை எழுத தொடங்குகள்.

WPMU Theme pack by WPMU-DEV.