எண்ணங்கள் எழுத்தாக






         

October 17, 2008

மெகா இல்லை இல்லை,மெகா மெகா தொடர் !!!!!!!!!!!!!

Filed under: Uncategorized — kutty @ 4:42 am
Tags:
0
Digg me

பேரு தான் மெகா, ஆனா மெகா மெகா தொடர் ஆக இருக்கும் பொல.ஆமாங்க நான் நம்ம சன் டிவி லே ஓடுதே ஆனந்தம் மற்றும் கோலங்களை தான் சொல்லுகிறேன். என்னனு சொல்லறது எனக்கு தெரிந்த வரை கிட்ட தட்ட நான்கு-ஐந்து வருடமாக ஓடி கொண்டு இருக்கிறது.கதை வல வலன்னு ஜவு மாறி இழுத்து கொண்டே இருக்கிறார்கள்.

மெகா தொடர்னா ராடான் தொடர்தாங்க,சும்மா சூப்பரா இருக்கும்.என்னக்கு மிகவும் பிடித்த தொடர் இப்போ ஓடி கொண்டு இருக்கும் அரசிதான்.சித்தி,அண்ணாமலை,செல்விக்கு அப்புறம் இப்பொழுதுஅதிரடியாக ஓடிக்கொண்டு இருக்கிறது அரசி.இவங்க தொடர்லே என்ன ஸ்பெஷல்னா,எல்லாம் ஷார்ட் அண்டு ஸ்வீட்டா மற்றும் திகிலாகவும் இருக்கும்,அதாவுது ஒன்றரை அல்லது இரண்டு வருஷம் தான் ஒரு தொடரை எடுப்பாங்க .சித்தி சூப்பர் டூபப்ர் ஹிட்.அண்ணாமலை கொஞ்சம் மந்தமாக ஓடுச்சு ஆனா செல்விலே பிக் ஆப் ஆயிட்டாங்க .கொஞ்சம் நல்லா ஓடிக்கொண்டு இருந்த செல்வியை கூட சீக்கிரம் முடிக்க பாத்தாங்க.என்னடா சீக்கிரம்மா முடிக்கறாங்கன்னு பாத்தா செல்வி அரசிலே தொடரும்ன்னு ஒரு நல்ல செய்தியை சொன்னாங்க .நான் ராடான் தொடரோட தீவிரமான ரசிகை.

ராதிகா மேடம் ஒரு நிகழ்ச்சியில் கூறியதுவெள்ளித்திரையில் படம் என்றால் விஜயா,சூர்யா வா,பிரசாந்த,இல்லை யாரு ஹீரோன்னு கேப்பாங்க,ஆனா சின்ன திரையில்லே புது சீரியல்ன்னுகேள்வி பட்டாள் எந்த கதாநாயகி நடிக்க போறாங்கன்னு கேப்பாங்க.But when it comes to serials ‘We are the real heroes’.” சூப்பரா சொன்னாங்கலே .

கடைசிலே நான் கூறுவது என்னவென்றால் ஆனந்தம் மற்றும் கோலங்களை சீக்கிரமா முடிங்கப்ளீஸ்.



No Comments »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

You must be logged in to post a comment.

WPMU Theme pack by WPMU-DEV.